Saturday, July 4, 2009

தவிப்பு



நாளை ஒரு நாள் படிப்பாய் என்று
இன்று இந்த கிறுக்கல் . .

சுற்றிலும் அமைதி . . .
உறக்கத்தில் உலகம் . . .

நேரமும் ஒன்று . . . என் நினைவிலும் ஒன்று . . .

இரெண்டே சத்தம் . .
ஒன்று என் காதினில் பாடல் . .
மற்றொன்று இந்த பேனாவின் வருடல் . .

ஆழ்ந்து கேட்டால் . .மூன்றாவது சத்தம் . . துடிக்கும் என் இதயம் . .

நீளமற்ற வானம் போல்
கரையற்ற ஆறு போல்
சிறகற்ற மயில் போல்
நீர் இன்றி தவிக்கும் மீன் போல்
நீ இன்றி துடித்தது ஏங்கி . . .

No comments: